சம்பந்தனுக்காக வீட்டையே விட்டுக்கொடுத்த மஹிந்த – நெகிழ்ச்சி தருணம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பிக்காக, எதிர்க்கட்சித் தலைவருக்குரிய உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுக்கொடுக்க மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
கூட்டரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியதாலும், சூழ்ச்சி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதாலும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயற்படவேண்டிய நிலை அம்முன்னணிக்கு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றக்கட்டத் தொகுதியிலுள்ள அலுவலகமும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், எதிர்க்கட்சித் தலைவருக்குரிய வீடு இன்னும் கையளிக்கப்படவில்லை. இது தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்டுள்ள சிரேஸ்ட ஊகவியலார் ஆர். சிவராஜா, “ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடக்குமா இல்லையா?” என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் கேட்டேன்…
“இப்போதைக்கு நடக்கும் வாய்ப்பில்லை” என்றார்… “முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீங்கள் போகப்போவதாக செய்திகள் வந்துள்ளனவே… எப்போது போகிறீர்கள் ?” என்றேன்…
“ இல்லை…நான் அங்கு போக மாட்டேன்… சம்பந்தன் அதில் இருக்கட்டும்… அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு… அவர் வயது முதிர்ந்தவர்.. முன்னர் இருந்த வீட்டில் மாடி எற சிரமப்படுகிறார் என்று தான் அந்த வீடு கொடுக்கப்பட்டது… அதில் அவர் இருக்கட்டும்…” என்றார் மஹிந்த.”
என்று குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment