மு.கா வில் புயல் இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய ஹரிஸ் தயாராகிறார்!!!
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி எச்.எம்.எம்.ஹரிஸ் பதவியேற்றிருந்தார்.
இராஜாங்க அமைச்சராக பதவியேற்று இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் இவர் அரசாங்க தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment