கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் மன்சூர் நியமனம்!!!
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக மீண்டும் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாந்தர அதிகாரியான எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் அவர் நேற்று(5) முதல் மீண்டும் மாகாணக் கல்விப் பணிப்பாளராகிறார்.
அவர் இன்று(6) புதன்கிழமை மீண்டும் தனது பதவியை பொறுப்பேற்கிறார்.
இவர் ஏற்கனவே சுமார் 4 மாதங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்தவேளை கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி தொடக்கம் மாகாணக்கல்விப்பணிப்பாளராக எம்.ரி.எ.நிசாம் நியமிக்கப்பட்டார்.
ஒருமாத காலமாக நிசாம் கடமையாற்றிவந்தவேளை நேற்று நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரம் மீண்டும் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment