தரம் 5, A/L: ஓகஸ்ட் 30, 31 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை
க.பொ.த. உயர்தரப் பரீட்சை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான மேலதிக வகுப்புகளை, இம்மாத இறுதியிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதியும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது.
இதற்கமைய 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியிலிருந்து பரீட்சை நிறைவடையும் வரை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்காக அமைக்கப்படும் 2,678 பரீட்சை நிலையங்களில், 37,704 பேர் பரீட்சை எழுதவுள்ளனர்

Post a Comment