சுதந்திர தினம் தேசிய தினமாக மாற்றம்

71 ஆவது சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாப்படவுள்ளது.
அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆம் உறுப்புரைக்கமையவே இவ்வாறு கொண்டாப்படுவதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8ஆவது உறுப்புரையில் தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசிய தினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது என மைச்சர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.