வடமாகாண சபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு ஆளுநர் திடீர் விஜயம்

ஆளுநரின் “பொதுமக்கள் தினம்” நாளை கைதடி முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில்....வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (22) நண்பகல் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண சபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஆளுநருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்பட்டுவரும் நிலையில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சு அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள் பணிக்குழாமினருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
அத்தோடு நாளை (23) புதன் கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெறவிருந்த “பொதுமக்கள் தினத்தினை“ முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.