சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி இன்று ஆசிரியர்கள் சுகவீன லீவு போராட்டம்


அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தமது சம்பள முரண்பாட்டை நீக்கக்கோரி இன்று 13ஆம் திகதி சுகவீன  விடுமுறைப் போராட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். 
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, இதுதொடர்பில் தெரிவிக்கையில்:  
இன்றைய தினம் சுகவீன விடுமுறையோடு நாட்டின் பிரதான நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  
கடந்த 20வருடங்களுக்கு மேல் நிலவும் ஆசிரியர்கள், அதிபர்கள் சேவை சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்வதால் அதற்கெதிராக இன்றைய தினம் சுகவீன லீவு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.