தனியார் காணியில் பௌத்த விகாரை பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

தனது காணி­யில் தனது அனு­மதி இல்­லா­மல் பௌத்த மடம் அமைக்­கப்­பட்­டுள்­ளது என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்ள பெண் ஒரு­வர் தனது காணி­யைத் தனக்கு மீளத் தர வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

 வவு­னியா, கன­க­ரா­யன்­கு­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு அரு­கில் பௌத்த விகாரை ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விகா­ரை­யின் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில், விகா­ரை­யைப் பரா­ம­ரிக்­கும் பிக்கு மற்­றும் சிலர் தங்­கு­வ­தற்கு இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது இந்­தி­யா­வில் இருந்து நாடு திரும்­பி­யுள்ள பெண் ஒரு­வர் அந்­தக் காணி­க­ளுக்கு உரிமை கோரு­கின்­றார்.

 அந்த இரு விடு­தி­கள் அமைக்­கப்­பட்­டுள்ள 3 ஏக்­கர் காணி தனக்­குச் சொந்­த­மா­னது என்­றும், அந்­தக் காணி­யைத் துப்­பு­ர­வாக்­கச் சென்­ற­போது அரு­கில் நிலை கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தடை­களை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர் என்­றும் அந்­தப் பெண் கூறு­கின்­றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.