கொழும்பில் அதிகரிக்கும் ஆபாச செயற்பாடுகள் – பெண்கள் அதிரடியாக கைது!

கொழும்பின் புறநகர் பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதிலேயே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அங்கு பணியாற்றிய 7 பெண்கள் மற்றும் 3 முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல, நுகேகொடை, மாத்தறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26 – 40 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.