“INNOVATE SRI LANKA 2019” கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “INNOVATE SRI LANKA 2019” கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (02) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விஞ்ஞான, தொழிநுட்ப புத்தாக்கத் துறையில் சர்வதேச தூதுவராக கடமைபுரியும் வித்யாஜோதி கலாநிதி பந்துல விஜே உள்ளிட்ட நிபுணர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.